Thursday 4 March 2010

தமிழர் மானங்கெட்டவர்களா? திருமணம் - பாகம் 3

1.4 விஸ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபானி பீமிசதுஆரிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது
இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தம்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமல்லவா?

2. சமற்கிருத திருமணச் சடங்குகளில் இறைவனுக்கு இடமே இல்லை
சமஸ்கிருத திருமணச் சடங்குகளில் இறைவனுக்கு இடமே இல்லை; பதிலாக தேவர்கள் தான் முன்னாக்கம் செய்யப் பெறுகிறார்கள். எனவே சமஸ்கிருத திருமணம் நாத்திகமானது.


3. பண்பழிப்புச் சடங்குகள்
சமஸ்கிருதத் திருமணச் சடங்குகளில் காசியாத்திரை, நாமகரணம், ஜாதகர்மம், அன்னப்பிராசனம், சூடா-கர்மா மற்றும் மதுவர்க்கம் போன்ற பொருளற்ற, அறிவுக்கிசையாத, அறநெறிக்கு மாறான, ஆபாசமான, ஆட்சேபணைக்குரிய சடங்குகள் உள்ளன.


சமஸ்கிருதத் திருமணங்களில் தாலிகட்டும் சடங்கே கிடையாது என்று ரிக் வேதத்திலிருந்து திருமணச் சடங்குகளைத் தொகுத்து வழங்கும் ஏகாக்கினி காண்டம் என்ற நூல் கூறுகிறது. இந்நூல்களின் உரையாளர்கள் தாலிகட்டுதல் என்பது ஆரிய இனத்தின் வழக்கமல்ல என்றும், இது திராவிட இனத்தின் வழக்கம் என்றும், பிற்காலத்தில் இச்சடங்கு ஆரிய இனத்திலும் நுழைந்து விட்டது என்றும் தெளிவுபட எடுத்துரைக்கிறார்கள். அதனால் மாங்கல்யம் தந்துநானேனா என்று தற்காலத்தில் ஒலிக்கப்படும் சொற்கட்டு பிற்காலத்தில் பெயர் தெரியாத எவரோ இயற்றியது என்றும் உறுதிப்படுத்துகிறார்கள்.




4. சப்தபதி
சமஸ்கிருதத் திருமணச் சடங்குகளின் கருப்பகுதி சப்தபதி என்பதாகும். இதன்படி மணமகன், மணமகளை ஏழடி எடுத்து வைத்து நடக்கச் செய்வான். ஒவ்வோரடிக்கும் ஒரு மந்திரம் உண்டு. அதில் ஒரு மந்திரம் இப்படிக் கூறுகிறது.
"நாம் இருவரும் நல்ல நண்பர்கள். மணமகனாகிய நான் நம் நட்பிற்கு எவ்விதத் துரோகத்தையும் செய்ய மாட்டேன்; மணமகளாகிய நீயும் அப்படியே எவ்விதத் துரோகத்தையும் செய்து நம் நட்பை முறித்து விடக்கூடாது."

இந்த மந்திரம் மணமகள் எதிர்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் மணமகனுக்குத் துரோகம் செய்து ஓடி சோரம் போகக் கூடும் என்றும் பொருள் தருவதாக உள்ளது. திருமண மேடையிலேயே மணமகளை இவ்வாறு சித்தரிப்பது அவளை இத்தனை தூய்மையற்றவளாக அவமதிப்பது ஆகும். இவ்வாறு சித்தரித்தால் அவர்களின் திருமண உறவு எப்படி விளங்கும்? மேலும், தம்பதியர் என்பது வேறு; நண்பர்கள் என்பது வேறு. இரண்டும் ஒன்றாக முடியாது. இது முற்றிலும் அறிவுக்கும் பொருந்தாதது. மணமகளைப் பார்த்து மணமகன் என்னை விட்டு ஓடிப் போகாதே என்பது எவ்வளவு அநாகரியமான சொல். ஆனால் தமிழ்மகள் கற்பை உயிரினும் சிறந்ததாக எண்ணுவாள் என்று தொல்காப்பியம் கூறுவது எத்துணை சாலச் சிறந்தது!

5. அகலிகை - அருந்ததி
மற்றொரு சடங்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்பதாகும். கௌதம முனிவரின் மனைவி அகலிகை இந்திரனிடம் சோரம் போனதால் அவளைக் கல்லாகச் சபித்தார் அம்முனிவர் என்பதை வைத்து, கற்புக்கரசியாக வாழ வேண்டும் என்பதை நினைவூட்டவே அது என்று கூறப்படுகிறது! கற்பிழந்தவள், சோரம் போனவளை அந்த நாளில் காட்டி, அச்சுறுத்தித்தான் மணப் பெண்ணைக் கற்பு நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என்பது மிகவும் வியப்பான ஒன்றல்லவா? அருந்ததி என்பது ஒரு விண்மீன் (நட்சத்திரம்) என்று கூறி அதனைப் பட்டப் பகலில் அதுவும் பந்தலுக்குள் மணமகளை நிறுத்தி `அருந்ததி பார்த்தாயா என்று கேட்பதும், `ஆம் என்று பொய் சொல்லப் பழக்குவதும் மிகவும் வேடிக்கையான ஒன்று அல்லவா?


6. தமிழர்களைச் சூத்திரர்கள் என்று அடையாளப்படுத்துவது
அவர்களின் மனுதரும சாத்திரத்தில் தமிழர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையே இல்லை என்றும் மேல் சாதிக்காரனுக்குத்தான் மணம் புரிந்து கொண்டு கணவனும் மனைவியுமாக வாழும் உரிமை உண்டு என்றும் எழுதி வைத்தனர். சூத்திரர்களுக்கு மண உரிமை இல்லை என்பதற்கு மற்றொரு நடைமுறை ஆதாரம் என்னவென்றால், பார்ப்பனப் புரோகிதர் வந்து நடத்தி வைக்கும் வைதீக திருமணங்களில், மணமகனுக்கு உடம்பில் பூணூல் அணிவித்து பிறகுதான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.


7. அறிவிற்குப் பொருந்தாமை
திருமணத்திற்குச் சான்றாக அக்னியும் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும் மற்றும் கின்னரர்களும், கிம் புருடர்களும் மணமக்களில் எவருக்காவது ஒரு சிறு விவகாரம் ஏற்பட்டு நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்றால், இவர்களில் எந்தச் சாட்சியினர் வருவார்களோ?


8. பெண்களைக் கேவலப்படுத்தும் ஆரிய ஒழுக்கம்.
``பெண்களைக் கேவலப்படுத்தும் `சம்பந்த திருமண முறையும் ஆரிய ஒழுக்கமும்! ஆரிய ஒழுக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும், `பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கருத்துக்கள் கீழே தரப்படுகின்றன.

“Taking the attitude of the people, the person of the Brahmin is sacred. In ancient time, he could not be hanged no matter what offence he committed. As a sacred person he had immunities and privileges which were denied to the servile class. He was entitled to first fruits. In Malabar, where the Sambandham marriage prevails to first fruits. In Malabar, where the sambandham marriage prevails, the service classes such as the Nairs regard it an honour to have their females kept as mistresses by Brahmins. Even kings invited Brahmins to deflower their queens on prima noctis. There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed. Sir P.C. Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning to the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass ready to wash his feet and take it to their parents waiting to sip it before taking their food. Under the British Government and by reason of its equalitraian jurisprudence these rights, immunities and privileges of the Brahmins have ceased to exist. Nonetheless the advantages they gave still remain and the Brahmin is still pre-eminent and sacred in the eyes of the servile classes and it still addressed by them as ‘Swami' which means ‘Lord'.
(What congress and Gandhi have done to the unthouchables - pp, 205-206)



இதன் தமிழாக்கம் வருமாறு:

``பிராமணனைப் புனிதமானவனாக மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவன் எத்தகைய குற்றங்களை இழைத்தாலும் அவனுக்குத் தண்டனை கிடையாது என்பதுதான் பழங்காலத்து நிலை யாகும். அவன் புனிதமானவன் என்பதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட பல விதிவிலக்குகளும், உரிமைகளும் அவன் பெற்றிருந்தான். முதல் அனுபவப் பாத்தியதை அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. மலபாரில் `சம்பந்தம் மண முறை நடைமுறையிலிருந்தது. அங்கிருந்த நாயர்கள், அவர் களுடைய மனைவியர் பிராமணர்களால் ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்ளப் படுவதை அவர்களுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதினர். அரசர்களும்கூட அவர்களுடைய அரசியருடன் முதல் உடல் உறவு கொள்ள பிராமணர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள்.

பிராமணரின் கால் விரலைக் கழுவிய தண்ணீரைக் குடிக்காமல் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் யாரும் உணவு உட்கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் காலை வேளைகளில் கல்கத்தாவின் சாலை ஓரங்களில் கைகளில் நீர் நிறைந்த குவளைகளை வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் காத்து நிற்பார்களாம். அந்த வழியாகப் போகின்ற பிராமணரின் காலைக் கழுவிய நீரைக் கொண்டு போய்த் தங்கள் பெற்றோர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அப்படிக் காத்துக்கிடப்பார்களாம். அந்த நீரைக் கொண்டு போய் அவர்களது பெற்றோர்களுக்குக் கொடுப்பார்களாம். பிராமணர் கால் கழுவிய அந்த நீரை ஒரு மடக்குக் குடித்த பிறகே உணவு உண்பார்களாம். இதற்காக அந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் சாலை ஓரங்களில் காத்துக் கிடப்பது வழக்கமாம். அப்படி அவர்கள் காத்துக் கிடந்ததைத் தம் குழந்தைப் பருவத்தில் பார்த்திருப்பதாக பி.சி. ராய் ஒரு முறை தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நீதிக்குமுன் அனைவரும் சமம் என்ற அவர்களின் அறிவார்ந்த அணுகுமுறையினால் பிராமணர்களுக்கெனச் சிறப்பாக விதிக்கப்பட்டிருந்த உரிமைகள் விதி விலக்குகள், சலுகைகள் முதலிய பலவும் நிறுத்தப்பட்டன.

இத்தனை அனுகூலங்கள் வழங்கப்பட்டிருந்தும்கூட ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் பிராமணன் மேலானவன், புனிதமானவன் என்ற நிலை இன்னும் தொடர்கிறது. அதனால்தான் இன்றும்கூட ஒடுக்கப்பட்ட மக்களால், பிராமணர்கள், பிரபு என்னும் பொருள்பட `ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றனர்.

தொடரும் - பாகம் 4

3 comments:

மனோவியம் said...

கொடுமையான விடயங்கள்.....தமிழர்கள் எப்படி எல்லாம் ஏமாற்பட்டியிருக்கிறார்கள் என்பது இப்பொழுது தான் புரிகிறது ஐயா. அருமையான பதிவு.தொடருங்கள்.

தமிழரண் said...

வணக்கம் ஐயா. தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

//தமிழர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றபட்டியிருக்கிறார்கள் என்பது இப்பொழுது தான் புரிகிறது ஐயா.//

ஏமாற்றியவர்களை இனி என்ன சொல்லியும் ஆவது ஒன்றுமில்லை.

நாம் ஏமாந்தவர்கள் என்பதைக் கூட அறியாமல் இருக்கிறார்களே, அறியவும் மறுக்கிறார்களே இதுதான் ஐயா மிகவும் கொடுமையாக உள்ளது.

arul said...

different news